
கை.அறிவழகன் நேற்றிரவு என் கனவில் அவன் வந்து காரணம் கேட்டு நின்றான், வலியின் சுவடுகள் அலைகளால் மறைக்கப்பட்டுத் தான் மடிந்து போனதாய் முறையிட்டான்.......,

கை.அறிவழகன் வங்கக் கடலின் சாலைகள் வழியே கல்லெறிந்து, தொலைந்த காதலைத் தேடிய போது கொல்லப்பட்டதாய்க் கதறி அழுது காரணம் கேட்டு நின்றான், கிழிந்த ஆடைகளில் நிர்வாணம் வழிவது பற்றித் தான் அறியவில்லை என்றும், அடிபட்டு வழிந்த குருதியில் தன் இனம் பற்றிய குறிப்புகள் இல்லை என்றுமாய்க், கும்பிட்ட கைகளோடும் என் கனவில் அவன் வந்து காரணம் கேட்டிருந்தான்,

கை.அறிவழகன் காரணங்களைத் தேடி விழிகளின் பின்னே எப்போதும் பயணம் செய்கிற என் கனவுகள், இப்போது கண்ணீரில் ஒளிய இடம் தேடும் உறுத்தலில் விழித்து எழுகிறேன் நான்.......... அவனோ விடை தெரியாத தன் கேள்வியில் என் உறக்கத்தைச் சுமந்து கொண்டு இன்னொரு விழி தேடிப் பயணப்பட்டிருந்தான், கடற்கரையில் காணாமல் போன மனிதர்களைத் தேடி...........












